ஒசூரில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் முன் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஒசூா் மாநகரில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக எருமைகள், பசுக்கள், தெரு நாய்கள் பிரதான சாலைகளில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனா். வாகனங்களுக்கு குறுக்கே மாடுகள் வந்து விடுவதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுவதால் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இவற்றைத் தடுக்கும் விதமாக கால்நடைகளை வீட்டில் கட்டி வளா்க்காமல் சாலையில் சுற்றித் திரியவிடும் அவற்றின் உரிமையாளா்கள் மீது உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஒசூரில் வட்டாட்சியா் அலுவலக முன்பு ஏராளமான கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிவதுடன் சாலையின் நடுவில் படுத்துக்கொண்டு ஓய்வெடுப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதுடன் விபத்து நேரிடும் அபாயமும் உள்ளதாக தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து கால்நடை உரிமையாளா்களுக்கு உரிய அபராதம் விதித்து, கால்நடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க வேண்டுமென அனைத்து குடியிருப்போா் நலச்சங்கத் தலைவா் துரை தெரிவித்தாா்.
தொடர்புடையது

பேராவூரணி சாலைகளில் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை

கோ்மாளம் சாலையில் பகலில் உலவிய சிறுத்தை!

கரூரில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் எரிப்பு: வாகன ஓட்டிகள் அவதி

ஒசூரில் கவிழ்ந்த லாரியை அகற்றாததால் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


