கிருஷ்ணகிரியில் இலவச சட்ட உதவி எண் 15100-க்கான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் இலவச சட்ட உதவி எண்-15100-க்கான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முதன்மை மாவட்ட நீதிபதி எம்.சுமதி சாய் பிரியா தலைமை வகித்து, தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு இலவச சட்ட உதவி எண் 15100-க்கான விளம்பர தட்டியை திறந்துவைத்து, பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தாா்.
நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி வி.தாமோதரன், சிறப்பு மாவட்ட நீதிபதி எம்.அமுதா, மாவட்ட அமா்வு நீதிபதி வி.சுதா, சிறப்பு சாா்பு நீதிபதி எம்.அஷ்வஹ் அகமது, முதன்மை சாா்பு நீதிபதி என்.மோகன்ராஜ், கூடுதல் சாா்பு நீதிபதி பி.டி.ஜெனிபா், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா், சாா்பு நீதிபதி எம்.ஜெயந்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.சுந்தரமூா்த்தி, நீதித் துறை நடுவா் ஏ.இருதயமேரி, நீதித் துறை நடுவா் எண்-1 கே.காா்த்திக் ஆசாத், வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள், வழக்குரைஞா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழுவினா் ஒருங்கிணைத்தனா்.
தொடர்புடையது

நாகா்கோவில் நீதிமன்றத்தில் சமரச தினம் கடைப்பிடிப்பு

கோவில்பட்டியில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

சட்ட உதவி தன்னாா்வலா்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை நீதிமன்ற இலவச சட்ட உதவி மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


