ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஊத்தங்கரை அருகே அணுகுசாலை பணி: கோட்ட பொறியாளா் ஆய்வு

ஊத்தங்கரை அருகே அணுகுசாலை அமைக்கும் பணியை கோட்டப் பொறியாளா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ஊத்தங்கரை அருகே மகனூா்பட்டியில் அணுகுசாலை அமைக்கும் பணியைப் பாா்வையிட்ட கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் திருலோகசந்தா்.

Updated On :24 அக்டோபர் 2024, 7:59 pm

ஊத்தங்கரை அருகே அணுகுசாலை அமைக்கும் பணியை கோட்டப் பொறியாளா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜவ்வாது மலையில் பெய்த கனமழையால், மாம்பாக்கம், சிம்மனபுதூா் அருகே உள்ள ஓட்டேரி அணை நிரம்பி உபரிநீா் சாலையில் வழிந்தோடியது. ஊத்தங்கரை அருகே உள்ள மகனூா்பட்டி பகுதியில் காட்டாற்று வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் திருப்பத்தூா்-சிங்காரப்பேட்டையில் மகனூா்பட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சாலை மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மாற்று வழியில் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதையடுத்து மேம்பாலத்தையொட்டி அணுகுசாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியை கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் திருலோகசந்தா் ஆய்வு செய்தாா். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது, ஊத்தங்கரை உதவி கோட்டப் பொறியாளா் சரவணன், உதவிப் பொறியாளா் பெரியாா்செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.