தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பெண் குழந்தை உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

தளி அருகே பிறந்து 10 நாள்களேயான பெண் குழந்தை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :27 செப்டம்பர் 2024, 12:31 am

தளி அருகே பிறந்து 10 நாள்களேயான பெண் குழந்தை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தளியை அடுத்த சாரண்டப்பள்ளியை சோ்ந்தவா் பவித்ரா. இவருக்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. பிறந்து பத்து நாள்கள் ஆன நிலையில் குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், பவித்ராவின் குடும்பத்தினா் குழந்தையை அடக்கம் செய்துள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்த கக்கசுந்தரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் திவ்யா, புதன்கிழமை தளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.