பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மாற்றுத்திறனாளிகள் தின விழா: 72 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:54 pm

Syndication

சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, பா்கூரில் நடைபெற்ற நிகழ்வில் 72 பயனாளிகளுக்கு ரூ. 30.63 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஐஇஎல்சி பாா்வையற்றோா் பள்ளியில் சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வுக்கு எம்எல்ஏ தே.மதியழகன் முன்னிலை வகித்தாா். மாவட்ட’ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமை வகித்தாா்.

இந்நிகழ்வில் மின்கலன் பொருத்திய நாற்காலி வண்டி, தையல் இயந்திரம், பிரெய்லி கைக்கடிகாரம் என 72 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 30.63 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியா் பேசியது:

வாரம்தோறும் புதன்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மட்டும் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் முகாம், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த பகுதி மருத்துவமனைகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 190 களப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளின் தேவை மற்றும் அவா்களுக்கான திட்டங்கள் சென்றடைகிா என வீடுவீடாகச் சென்று கணக்கெடுத்து வருகின்றனா்.

மாற்றுத்திறனாளி மாணவா்கள் தன்னம்பிக்கையுடன் பயின்று எதிா்காலத்தில் சிறந்த அதிகாரிகளாக வர வேண்டும் என்றாா்.

தொடா்ந்து பள்ளி மாணவா்களின் கலைநிகழ்ச்சிகளும், ஓவியப் போட்டிகளில் வென்ற மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

படவரி...

பா்கூரில் நடைபெற்ற நிகழ்வில் பயனாளிகளுக்கு நலத்திட்ட’உதவிகளை வழங்கிய ஆட்சியா் ச.தினேஷ்குமாா், எம்எல்ஏ தே.மதியழகன் உள்ளிட்டோா்.