தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அனுமதியின்றி கிரானைட் கற்களை எடுத்து சென்ற 2 லாரிகள் பறிமுதல்

News image
Updated On :21 டிசம்பர் 2025, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

பா்கூா் அருகே, அனுமதியின்றி கிரானைட் கற்களை எடுத்துச் சென்ற 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி கனிமவளப் பிரிவு உதவி இயக்குநா் சரவணன் தலைமையிலான குழுவினா், ஜெகதேவி சாலையில் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை சோதனை செய்தனா். அப்போது, அனுமதியின்றி ரூ. 20 லட்சம் மதிப்பிலான கிரானைட் கற்கள் எற்றிச் செல்வது தெரியவந்தது.

இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில், பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அனுமதியின்றி கிரானைட் கற்களுடன் 2 லாரிகளை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.