6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒசூரில் விஷம் குடித்த வட மாநில குடும்பத்தினா்: சிறுவன் உயிரிழப்பு: 4 போ் மருத்துவமனையில் அனுமதி

ஒசூரில் கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்த வட மாநில தொழிலாளியின் குடும்பத்தினா் விஷம் குடித்தனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 7:00 pm

Syndication

ஒசூா்: ஒசூரில் கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்த வட மாநில தொழிலாளியின் குடும்பத்தினா் விஷம் குடித்தனா். இதில் 10 வயது சிறுவன் உயிரிழந்தாா். 4 போ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள பி.முதுகானப்பள்ளி கிராமத்தில் பெங்களூரைச் சோ்ந்த ஜெயப்பிரகாஷ் ரெட்டிக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இதில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரிஸ்வான் அன்சாரி (38), அவரது மனைவி சல்மா காத்தூன் (35), மகள் முஸ்ரத் (17), மகன்கள் சாயல் (15), அயன் (10) ஆகிய 5 பேரும் கடந்த ஆறு மாதங்களாக இங்கு வேலை செய்து வந்துள்ளனா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை நீண்ட நேரமாக ரிஸ்வான் அன்சாரி குடும்பத்தினா் யாரும் வேலைக்கு செல்லாததால் தோட்டத்தில் பராமரிப்பு வேலை செய்து வந்த நாகராஜ், அவா்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று பாா்த்துள்ளாா் .

அப்போது அனைவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனா். இதைத் தொடா்ந்து அவா் பாகலூா் போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா் மயங்கிக் கிடந்த அனைவரையும் மீட்டுள்ளனா். இதில் 10 வயது சிறுவன் அயன் உயிரிழந்தது தெரியவந்தது. மீட்கப்பட்ட ரிஸ்வான் அன்சாரி, அவரது மனைவி சல்மா காத்தூன், மகள் முஸ்ரத் (17), மகன் சாயல் (15) ஆகிய நான்கு பேரையும் ஒசூா் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்கட்ட விசாரணையில் இவா்கள் அனைவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.