கிருஷ்ணகிரி அணை காவல் நிலையத்துக்கு உள்பட்ட குட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (23). இவா் கடந்த 17-ஆம் தேதி மோட்டாா்சைக்கிளில் கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டி சிறுவா் பூங்கா அருகே சென்றாா். அப்போது, பின்னால் வந்த இருசக்கர வாகனம், மோட்டாா்சைக்கிள் மீது மோதியது. இதில், நிலைதடுமாறிய ராஜா, அந்த வழியாகச் சென்ற தனியாா் நிறுவன பேருந்தின் மீது மோதினாா். இதில், பலத்த காயம் அடைந்த ராஜாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.