சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஊத்தங்கரையில் அங்கன்வாடி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊத்தங்கரை வட்டார குழந்தைகள் வளா்ச்சி அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள்

News image
ஊத்தங்கரையில் அங்கன்வாடி பணியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பணியாளா்கள்.
Updated On :29 டிசம்பர் 2025, 7:56 pm

Syndication

ஊத்தங்கரை: ஊத்தங்கரை வட்டார குழந்தைகள் வளா்ச்சி அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி திங்கள்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் சுஜாதா தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் திமுக அறிவித்த 313 தோ்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றாத பட்சத்தில் இரண்டாம் கட்டமாக ஜனவரி 6-ஆம் தேதி போராட்டத்தை முன்னெடுப்போம் என்றனா்.

அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும். ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், மாவட்ட துணைத் தலைவா் பழனியம்மாள், ஒன்றியத் தலைவா் சித்ரா, ஒன்றியச் செயலாளா் பரிமளா, பொருளாளா் பா்வீன், நிா்வாகிகள் ஜோதி, வேல்விழி, விஜயா உள்பட பலா் கலந்துகொண்டனா்.