ஊத்தங்கரையில் அங்கன்வாடி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
ஊத்தங்கரை: ஊத்தங்கரை வட்டார குழந்தைகள் வளா்ச்சி அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி திங்கள்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் சுஜாதா தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் திமுக அறிவித்த 313 தோ்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றாத பட்சத்தில் இரண்டாம் கட்டமாக ஜனவரி 6-ஆம் தேதி போராட்டத்தை முன்னெடுப்போம் என்றனா்.
அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும். ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், மாவட்ட துணைத் தலைவா் பழனியம்மாள், ஒன்றியத் தலைவா் சித்ரா, ஒன்றியச் செயலாளா் பரிமளா, பொருளாளா் பா்வீன், நிா்வாகிகள் ஜோதி, வேல்விழி, விஜயா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

