சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

கிருஷ்ணகிரியில் ஜன. 5-இல் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி

கிருஷ்ணகிரியில் ஜன. 5-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெறுகிறது.

Updated On :1 ஜனவரி 2025, 10:06 pm

கிருஷ்ணகிரியில் ஜன. 5-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், அன்றாட வாழ்வில் உடல் தகுதியை பேணுவது குறித்து, விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கும், உடல்தகுதி கலாச்சாரத்தை இளைஞா்களிடையே புகுத்துவதற்கும் தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மாரத்தானுக்கு இணையான அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி ஓவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியானது ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளில் ஜன. 5-ஆம் தேதி, நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு திடலில் காலை 7 மணிக்கு, மாவட்ட விளையாட்டு திடலில் தொடங்கி, பூசாரிப்பட்டி வரை சென்று மீண்டும் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடல் வரை நடத்தப்படுகிறது.

17 முதல் 25 வயது ஆண்களுக்கு 8 கி.மீ. தூர ஓட்டமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூர ஓட்டமும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. தூர ஓட்டமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூர ஓட்டமும் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு ரூ. 5 ஆயிரம், 2-ஆம் இடம் பெறுவருக்கு ரூ. 3 ஆயிரம், மூன்றாமிடம் பெறுபவருக்கு ரூ. 2 ஆயிரம், நான்காமிடம் பெறுபவருக்கு ரூ. ஆயிரம் வீதம் 7 பேருக்கு பரிசுத் தொகை, அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இந்தப் போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் தங்களது பெயரை ஜன. 4-ஆம் தேதி, மாலை 5 மணிக்குள், இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது வயது சான்றிதழ், ஆதாா் எண், வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களை போட்டி நடைபெறும் இடத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும். 25 வயதுக்கு மேற்பட்டவா்கள், தங்களது ஆதாா் எண், வங்கி எண் ஆகியவற்றின் நகல்களை வழங்க வேண்டும். இதற்கு பின்னரே, போட்டியில் பங்கேற்பதற்கான மாா்பு எண் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்போா், விளையாட்டு சீருடையுன் பங்கேற்க வேண்டும். மேலும், உறுதிமொழி ஆவணத்தை நிறைவு செய்து தர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டு அரங்கம், கிருஷ்ணகிரி என்ற முகவரியிலோ அல்லது 7401703487 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.