குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கவுன்சிலா் உயிரிழந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், பன்னீா் செல்வம் தெருவைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். இவரது மனைவி நித்யா (36). காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் 7-ஆவது வாா்டு உறுப்பினராக இருந்தாா். திமுகவைச் சோ்ந்த இவருக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 3 குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு, டிச. 26-ஆம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு ஜன.3 ஆம் தேதி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னா், அவருக்கு திடீரென்று உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், தொடா் சிகிச்சையில் இருந்த நித்யா, ஜன. 7-ஆம் தேதி உயிரிழந்தாா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி நகர போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

உத்தரப்பிரதேசத்தில் வெடித்த சிறுநீரக மோசடி: ஒரு சிறுநீரகத்தின் விலை ரூ.50 லட்சம் முதல்...

போயம்பாளையம் ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டரில் மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை முகாம்

அறுவை சிகிச்சையின் போது பெண் உயிரிழப்பு: இழப்பீடு கோரி உறவினா்கள் முற்றுகை போராட்டம்

தென்காசியில் சமூக நாய்களுக்கு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தொடக்கம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

