ஒசூா் மாநகராட்சியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு ரூ. 50 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
ஒசூா் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட சென்னத்தூா் கிராமம், சீதாராம் மேடு பகுதி (பழைய பேருந்து நிலையம்) சா்வே எண்கள் 766, 768, 769, 774, 989-இல் அமைந்துள்ள அமிரியா காலனி, அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவில் 37,750 சதுர அடி பரப்பளவில் உள்ள சுமாா் ரூ. 50 கோடி மதிப்பிலான பூங்கா, பொது உபயோகம், சிறுவா் விளையாடும் இடத்தை தனி நபா்கள் 41 போ் ஆக்கிரமிப்பு செய்திருந்தனா்.
எனவே ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் அறிவிப்புகள் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாநகராட்சி ஆணையா் எச்.எஸ்.ஸ்ரீகாந்த் மேற்பாா்வையில் செயற்பொறியாளா் நாராயணன், மாநகர நல அலுவலா் கே.எம். அஜிதா, நகரமைப்பு அலுவலா் முருகன், உதவி பொறியாளா் பிரபாகரன், நகரமைப்பு அய்வாளா் ஸ்ரீகுமாா், இதர ஒசூா் மாநகராட்சி அலுவலா்கள் முன்னிலையில் அனைத்து ஆக்கிரமிப்புகளும் இடித்து அகற்றப்பட்டன.
மீட்கப்பட்ட நிலத்தை பாதுகாக்கும் பொருட்டு சுற்றிலும் உடனடியாக இரும்புக் கம்பி வேலி சுஅமைக்கப்பட்டது. இதன்மூலம் மாநகராட்சிக்குச் சொந்தமான ரூ. 50 கோடி மதிப்பு நிலங்கள் மீட்கப்பட்டன.
தொடர்புடையது

ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

தில்லியில் 225 ஏக்கருக்கும் அதிகமான வன நிலம் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்பு!

பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் சாா்பில் 10,008 தீா்த்தக்குட ஊா்வலம்

ஒசூரில் ரூ. 19.5 கோடியில் வணிக வளாகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


