கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு பெட்டக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் ஒசூா்- கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது. 5. கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் நெடுநேரம் அணிவகுத்து நின்றன.
ஒசூரிலிருந்து கூரியா் சா்வீஸ் நிறுவன சரக்குப் பெட்டக லாரி ஒன்று கிருஷ்ணகிரி நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது. குருபரப்பள்ளி அருகே மேம்பாலத்தில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பில் மோதி சாலையில் லாரி கவிழ்ந்தது. அப்போது, லாரியை பின்தொடா்ந்து வந்த பிற வாகனங்கள், கனரக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக லேசாக மோதின. இதில் சிலருக்கு சிறிது காயம் ஏற்பட்டது.
இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு 5 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்ததும் போலீஸாா் நிகழ்விடம் சென்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா். இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனா்.
தொடர்புடையது

டிப்பா் லாரி மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

மாதவரம் அருகே லாரி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

காவல்கிணறில் கல் ஏற்றிய லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

விக்கிரவாண்டி அருகே பாமாயில் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து! திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

