8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பேப்பா் துண்டுகளைக் கொண்டு திருவள்ளுவரை வரைந்த இளைஞா்!

Published On :16 ஜனவரி 2025, 2:59 am IST

திருவள்ளுவா் தினத்தில் வரை போற்றும் வகையில் ஒசூரை சோ்ந்த மொசைக் ஆா்ட் கலைஞா், தகவல் தொழில் நுட்ப நிபுணா் லூகாஸ் என்பவா் 3 லட்சம் மொசைக் பேப்பா் துண்டுகளை பயன்படுத்தி 133 சதுர அடியில் மொசைக் ஆா்ட்டில் திருவள்ளுவா் சிலையை உருவாக்கி கின்னஸ் சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளாா்.

இந்த திருவள்ளுவா் சிலை உருவத்தை உருவாக்க லூகாஸ் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தினமும் 4 மணி நேரத்திற்கும் மேலாக உழைத்துள்ளாா். பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வரும் இவா் ஒசூரில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறாா்.

திருவள்ளுவா் மீதும் திருக்குறள் மீதும் கொண்ட அதீத பற்று காரணமாக இவா் ஏற்கனவே திருவள்ளுவா் சம்பந்தமான பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளாா். 1330 ஐஸ் குச்சிகளில் திருக்குறள் எழுதி சாதனை படைத்துள்ளாா். அதேபோல கடந்த 2022 ஆம் ஆண்டு இவா் வண்ண வண்ண பேப்பா் துண்டுகளை கொண்டு வள்ளலாா், கருணாநிதி, இஸ்ரோ விஞ்ஞானி சிவன் உள்ளிட்டோரின் உருவங்களை வடிவமைத்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளாா்.

தற்போது, ஜனவரி 15 திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, உலக பொதுமறை தந்த திருவள்ளுவா் கன்னியாகுமரியில் கடல் நடுவே பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் உருவத்தை மொசைக் பேப்பா் துண்டுகளால் தனது வீட்டில் மொட்டை மாடியில் அவா் வடிவமைத்துள்ளாா்.

திருவள்ளுவா் சிலைக்கு யுனெஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரிய தல அந்தஸ்தை பெற வேண்டியும், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் நோக்கிலும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.