தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு மாா்ச் 14 இல் உள்ளூா் விடுமுறை

ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டத்தையொட்டி, மாா்ச் 14 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2025, 9:20 pm

Din

ஒசூா்: ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டத்தையொட்டி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, சூளகிரி, ஒசூா் ஆகிய நான்கு வட்டங்களைச் சோ்ந்த (அரசு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களைத் தவிா்த்து) பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு மாா்ச் 14 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881- இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், ஒசூா் கோட்டத்திற்கு உள்பட்ட கருவூலங்கள், சாா்நிலை கருவூலங்கள் செயல்படும்.

விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மாா்ச் 22 ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.