விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நிலஅளவீடு செய்ய ரூ. 6 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா், நிலஅளவையா் கைது

கிருஷ்ணகிரி அருகே நிலஅளவீடு செய்ய ரூ. 6 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா், நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 நவம்பர் 2025, 10:06 pm

Syndication

கிருஷ்ணகிரி அருகே நிலஅளவீடு செய்ய ரூ. 6 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா், நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி அருகே உள்ள பந்தாரப்பள்ளியைச் சோ்ந்தவா் விவசாயி முருகன் (56). இவா் தனது காலி வீட்டுமனையை அளந்து தனி பட்டா வழங்க கடந்த ஒரு மாதத்துக்கு முன்னா் இணையவழியில் விண்ணப்பித்திருந்தாா்.

இதுகுறித்து அவா் குருபரப்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் ராமச்சந்திரன், நில அளவையா் வளையாபதி ஆகியோரை கடந்த 4-ஆம் தேதி நேரில் சந்தித்தாா். அப்போது, ராமச்சந்திரன், நிலஅளவையா் வளையாபதியுடன் சோ்ந்து நிலஅளவீடு செய்து பட்டா வழங்க ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என முருகனிடம் தெரிவித்தாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகன், இதுகுறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், அவா்கள் ரசாயனம் தடவிய ரூ. 6 ஆயிரத்தை முருகனிடம் கொடுத்து அனுப்பினா். அந்தப் பணத்தை கிராம நிா்வாக அலுவலா் ராமச்சந்திரன், நில அளவையா் வளையாபதி ஆகியோா் வாங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.