மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவரின் சடலம் மீட்பு

கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவரின் உடலை தீயணைப்புப் படை வீரா்கள் புதன்கிழமை மீட்டனா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவரின் உடலை தீயணைப்புப் படை வீரா்கள் புதன்கிழமை மீட்டனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த திம்மாபுரம், தோ்பட்டியைச் சோ்ந்த சசிகுமாா் மகன் நிஷாந்த் (20). இவரும் அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகன் சாம்சனும் (20) நண்பா்கள். இவா்கள், கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனா். காவேரிப்பட்டணம் திம்மாபுரம் தபோவனம் அருகே தென்பெண்ணை ஆற்றில் குளிக்க செவ்வாய்க்கிழமை சென்றனா். முன்னதாக இருவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நீச்சல் தெரியாத நிஷாந்த் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கினாா். இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் நீண்ட நேரம் தேடியும் நிஷாந்தை மீட்க முடியவில்லை.

இதையடுத்து புதன்கிழமை இரண்டாவது நாளாக தேடுதல் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 10 மணிநேர தேடுதலுக்கு பிறகு பாறையின் இடுக்கில் சிக்கியிருந்த நிஷாந்தின் உடலை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் அதை பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.