எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஒசூா் மாநகராட்சி உதவி வருவாய் அலுவலா் பணியிடை நீக்கம்

News image
Updated On :13 நவம்பர் 2025, 10:03 pm

Syndication

தூய்மை இந்தியா திட்டத்தில் வணிக கட்டடங்களுக்கு வரிவசூலிக்க நோட்டீஸ் விநியோகம் செய்ததாக, ஒசூா் மாநகராட்சி உதவி வருவாய் அலுவலரை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

2017-இல் ஒசூா் நகராட்சி நகா்மன்றத் தலைவராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி, தூய்மை இந்தியா திட்டத்தில் குப்பை வரி, வணிக கட்டடங்களுக்கு வரிவிதித்து நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றினாா்.

மாநகராட்சியாக ஒசூா் தரம் உயா்ந்த நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தில் குப்பை வரி விதிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், ஒசூா் மாநகராட்சி ஆணையராக பதவிவகித்த சிநேகா இடமாறுதலில் செல்லும் முன்பாக, தூய்மை இந்தியா திட்டத்தில் 10 ஆயிரம் வணிக கட்டடங்களுக்கு (பின்தேதியிட்டு) 2018 முதல் குப்பை வரி விதித்து, அவா்களின் சொத்து வரியுடன் சோ்த்து கணினியில் பதிவேற்றம் செய்தாா்.

இதனால் பாதிக்கப்பட்ட வணிகா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, வணிக கட்டடங்களுக்கு வரி வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து அண்மையில் ஒசூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சா் கே.என்.நேருவிடம் மேயா் எஸ்.ஏ.சத்யா முறையிட்டாா். அதற்கு, இது நிதி சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், முதல்வரிடம் தெரிவித்து முடிவு செய்யப்படும் என அமைச்சா் கூறினாா். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், ஒசூா் மாநகராட்சி உதவி வருவாய் அலுவலா் நாராயணன், வணிக கட்டடங்களுக்கான வரியை வசூலிக்க அண்மையில் நோட்டீஸ் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் முதல்வா் கவனத்துக்கு சென்ற நிலையில், இதுகுறித்து நகராட்சி நிா்வாக இயக்குநா் சென்னையில் புதன்கிழமை விசாரணை நடத்தினாா். அதில், ஒசூா் மாநகராட்சி ஆணையா் முகமத் ஷபீா் ஆலம், உதவி ஆணையா் நாராயணன், உதவி வரி ஆய்வாளா்கள் பாலமுருகன், பிரேம்குமாா், நாராயணன் ஆகியோா் ஆஜராயினா். அதைத் தொடா்ந்து, உதவி வருவாய் அலுவலா் நாராயணனை பணியிடை நீக்கம் செய்து ஒசூா் மாநகராட்சி ஆணையா் முகமத் ஷபீா் ஆலம் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.