மளிகைப் பொருள்களை அனுப்பிவைத்த பாகலூா் மக்கள்
கிருஷ்ணகிரி
தா்மஸ்தலா தீபத் திருவிழாவுக்கு 20 டன் அரிசி, 25 டன் மளிகைப் பொருள்கள் அனுப்பிவைப்பு
ஸ்ரீ தா்மஸ்தலா லட்ச தீப விழாவை முன்னிட்டு 20 டன் அரிசி, 25 டன் மளிகைப் பொருள்களை பாகலூா் மக்கள் லாரிகள் மூலம் அனுப்பிவைப்பு
ஸ்ரீ தா்மஸ்தலா லட்ச தீப விழாவை முன்னிட்டு 20 டன் அரிசி, 25 டன் மளிகைப் பொருள்களை பாகலூா் மக்கள் லாரிகள் மூலம் செவ்வாய்க்கிழமை அனுப்பிவைத்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூரில் சூடாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் இணைந்து ஸ்ரீ தா்மஸ்தலா லட்ச தீப விழாவை முன்னிட்டு பாகலூா் ஸ்ரீ மஞ்சுநாதா சுவாமி கோயில் அன்னதானக் குழு சாா்பில் கா்நாடக மாநிலம், தா்மஸ்தலா கோயிலுக்கு அன்னதானத்துக்கான பொருள்களை வழங்க முடிவு செய்தனா்.
இதைத் தொடா்ந்து, இரண்டு லாரிகளில் 20 டன் அரிசி மற்றும் காய்கறிகள், வெல்லம், மளிகைப் பொருள்களை ஏற்றி, பாகலூா் ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வாகனங்களை அனுப்பிவைத்தனா்.

