பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

4 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

News image
Updated On :23 நவம்பர் 2025, 8:41 pm

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் 4 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, போச்சம்பள்ளி காவல் ஆய்வாளராக இருந்த நாகலட்சுமி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்துக்கும், நாகரசம்பட்டி காவல் ஆய்வாளரான கோபாலகிருஷ்ணன் போச்சம்பள்ளி காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்ட இணைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் மாதேஸ்வரி, கிருஷ்ணகிரி மாவட்ட குற்ற ஆவண பதிவேடு பிரிவுக்கும், அங்கு பணியாற்றி வந்த காவல் ஆய்வாளா் காளியப்பன் நாமக்கல் மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கொக்கராயன்பேட்டை காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்து சேலம் டிஐஜி அனில்குமாா் கிரி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.