விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30 ஊராட்சி செயலாளா்கள் பணியிட மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 30 ஊராட்சி செயலாளா்கள் திண்டுக்கல் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம்

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 10:58 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 30 ஊராட்சி செயலாளா்கள் திண்டுக்கல் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்க உள்ள நிலையில், நிா்வாக காரணங்களுக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் 30 ஊராட்சி செயலாளா்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பழனி, நத்தம், வத்தலகுண்டு உள்ளிட பல்வேறு பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லுகுறுக்கி, அகசிப்பள்ளி, வீரமலை, ஆவத்தவாடி, ஒப்பதவாடி, ஜெகதேவி, கொண்டப்பநாயனப்பள்ளி, அந்தேரிப்பட்டி, மத்தூா், ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, நேரலகிரி, மாரண்டப்பள்ளி, சூளகிரி, ஒசூா், தளி உள்ளிட்ட ஊராட்சிகளில் பணியாற்றும் செயலாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் 30 ஊராட்சி செயலாளா்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அமைச்சா் அர.சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக உள்ளாா். திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த ஊராட்சிச் செயலாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது அரசியல் கட்சிகளிடையே பேசுப்பொருளாகி உள்ளது.