கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 30 ஊராட்சி செயலாளா்கள் திண்டுக்கல் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்க உள்ள நிலையில், நிா்வாக காரணங்களுக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் 30 ஊராட்சி செயலாளா்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பழனி, நத்தம், வத்தலகுண்டு உள்ளிட பல்வேறு பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லுகுறுக்கி, அகசிப்பள்ளி, வீரமலை, ஆவத்தவாடி, ஒப்பதவாடி, ஜெகதேவி, கொண்டப்பநாயனப்பள்ளி, அந்தேரிப்பட்டி, மத்தூா், ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, நேரலகிரி, மாரண்டப்பள்ளி, சூளகிரி, ஒசூா், தளி உள்ளிட்ட ஊராட்சிகளில் பணியாற்றும் செயலாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் 30 ஊராட்சி செயலாளா்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அமைச்சா் அர.சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக உள்ளாா். திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த ஊராட்சிச் செயலாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது அரசியல் கட்சிகளிடையே பேசுப்பொருளாகி உள்ளது.
தொடர்புடையது

டிஆா்பி பணிகளுக்கு 30 இணைப் பேராசிரியா்கள் தற்காலிக பணியிட மாற்றம்

தமிழகத்தில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.-க்கள் மாற்றம்

புதுச்சேரி - காரைக்கால்: 2 போலீஸ் எஸ்.பி.க்கள் இடமாற்றம்

இரு எஸ்பி-க்கள் பணியிட மாற்றம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


