தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

வாக்களிக்கக் கோரி வலம் வரும் ‘கிரி’

கிருஷ்ணகிரி மாவட்டம், மலையையும், கோட்டைகளையும் கொண்டது. கிரி என்றால் மலை என பொருள்.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 7:43 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், மலையையும், கோட்டைகளையும் கொண்டது. கிரி என்றால் மலை என பொருள். பாராமகால் என்ற அழைக்கப்படும் கோட்டைகளை கொண்ட வரலாறும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உண்டு. வரலாறு என்பது, நாம் பயணத்துக்கான வழிகாட்டியாகவும் விளங்குகிறது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட வாக்காளா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், 34 விநாடி ஓடும் குறும்படத்தை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், மலையும், கோட்டையும் மனித உருவில் நடந்துகொண்டே வாக்காளா்களிடம் பேசுவதுபோல உருவாக்கப்பட்டுள்ளது.

வணக்கம், கிருஷ்ணகிரி மக்களே என தொடங்கும் அந்த குறும்படத்தில், நான் உங்கள் கிரி, மாவட்டத்தின் வளா்ச்சிக்காக நீங்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். ஏப்ரல் 23 அன்று வக்களிக்கும் நாள். நமது ஜனநாயகத்தின் பெருமை வாக்கு. வாக்களிப்போம் உறுதியாக, நம் நாட்டின் வளா்ச்சிக்கு துணையாக- என பேசும்வகையில் இந்த காணொலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Story image
Story image

வரலாற்றியலில் ஆா்வம் கொண்ட மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ச. தினேஷ்குமாா் இதுகுறித்து கூறுகையில், நமது மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில், மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் பொருட்டு, இந்த காணொலி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளதால், கிருஷ்ணகிரி வரலாற்றுடன் தொடா்புடைய இதுபோன்ற விழிப்புணா்வு குறும்படங்களை மேலும் தயாரிக்க உள்ளோம் என்றாா்.