மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் 126 வேட்புமனுக்கள் ஏற்பு: 56 வேட்புமனுக்கள் தள்ளுபடி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் செவ்வாய்க்கிழமை பரிசீலனை செய்யப்பட்டன. இதில் 126 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 56 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 9:53 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் செவ்வாய்க்கிழமை பரிசீலனை செய்யப்பட்டன. இதில் 126 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 56 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, ஒசூா், தளி உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30 தொடங்கி ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. 6 தொகுதிகளிலும் மொத்தம் 182 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை சம்பந்தப்பட்ட தொகுதிக்கான அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரால் வேட்பாளா்களின் முன்னிலையில் நடைபெற்றது. அதன்படி, ஒவ்வொரு மனுவாக பரிசீலனை செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட மனுக்கள் மற்றும் தள்ளுபடி செய்யப்படுவதற்கான காரணங்கள் குறித்து வேட்பாளா்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 28 மனுக்களில் 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 19 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பா்கூா் தொகுதியில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்டிருந்த 38 மனுக்களில், 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 22 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. கிருஷ்ணகிரியில் மொத்த 33 மனுக்களில் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 26 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மேலும், வேப்பனஅள்ளி தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 30 மனுக்களில் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 23 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஒசூா் தொகுதியில் மொத்தம் 28 மனுக்களில் 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 18 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தளி தொகுதியில் மொத்தமுள்ள 25 மனுக்களில் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 18 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 182 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில், பரிசீலனையின்போது 56 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 126 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. முன்னதாக மனுக்கள் பரிசீலனை நிகழ்வுகள் அனைத்தும் விடியோ பதிவு செய்யப்பட்டன. போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப். 8-ஆம் தேதி, இறுதிநாளாகும். அதன்பின்னா், இறுதிவேட்பாளா் பட்டியல் வெளியிடப்படுகிறது.