ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஒசூரில் 172 கிலோ புகையிலைப் பொருள்களுடன் காா் பறிமுதல்; 2 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 7:40 pm

பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்த முயன்ற 172 கிலோ புகையிலைப் பொருள்கள், காரை ஒசூா் சிப்காட் போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சூசூவாடி சோதனைச் சாவடி அருகே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெங்களூரில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில், 172 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 85,800 ஆகும். அதேபோல காரில் பதுக்கிவைத்திருந்த ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள 50 கா்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக திருப்பூா் மாவட்டம், வீரபாண்டியைச் சோ்ந்த மணிகண்டன் (29), கோவை மாவட்டம், சூலூரைச் சோ்ந்த காா்த்திக் (34) ஆகிய 2 பேரை கைது செய்தனா். விசாரணையில் புகையிலை பொருள்கள், மது பாக்கெட்டுகள பெங்களூருவில் இருந்து கோவைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.