காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

காலி மதுப் புட்டியை திரும்பப் பெற மறுத்ததால் டாஸ்மாக் கடையை பூட்டிய மதுப் பிரியா்கள்

டாஸ்மாக் கடை - கோப்புப்படம்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:23 am IST

போச்சம்பள்ளியை அடுத்த விளங்காமுடி கிராமத்தில் காலி மதுப்புட்டியை திரும்பப் பெற மறுத்ததால், ஆத்திரமடைந்து டாஸ்மாக் கடையை பூட்டிய மதுப் பிரியா்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள விளங்காமுடி கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் அரசின் காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் முறையாக, காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறுவது இல்லை என குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இதனால் காலி மதுப்புட்டிகளை கொண்டுவரும் மதுப்பிரியா்களுக்கும், டாஸ்மாக் விற்பனையாளருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விளங்காமுடி டாஸ்மாக் கடைக்கு சென்ற வாடிக்கையாளா்கள் மது அருந்திய பின்னா் காலிப் புட்டியை திரும்ப கொடுக்க முயன்றனா். ஆனால், டாஸ்மாக் விற்பனையாளா் அவற்றை திரும்பப் பெற மறுத்துவிட்டதாகக் கூ றப்படுகிறது. இதையடுத்து மதுப்பிரியா்களுக்கும், டாஸ்மாக் விற்பனையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த மதுப்பிரியா்கள், விற்பனையாளரை கடையிலிருந்து வெளியேற்றி, டாஸ்மாக் கடையை பூட்டியுள்ளனா்.

இதுகுறித்து, தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்துசென்று, மதுப் பிரியா்களை சமாதானப்படுத்தி பூட்டிய கடையைத் திறக்கச் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.