காதலா் தினம் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு பூக்களின் விலை சனிக்கிழமை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ஒசூா், சுற்றியுள்ள பகுதிகளில் குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், இப்பகுதி விவசாயிகள் சாமந்தி, செண்டுமல்லி, கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட மலா்களை அதிக அளவில் சாகுபடி செய்கின்றனா். இங்கு அறுவடை செய்யப்படும் மலா்கள் தமிழகம் மட்டுமின்றி கா்நாடக மாநிலத்துக்கும் விற்பனைக்கு அனுப்படுகின்றன.
காதலா் தினத்தையொட்டி, முதல்தர 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா ரூ. ஆயிரத்துக்கும், இரண்டாம்தர ஒரு கட்டு ரோஜா ரூ. 250-க்கும், ஒரு ரோஜா ரூ. 40-க்கும் விற்பனையானது.
அதேபோல, சிவராத்திரியையொட்டி சாமந்தி, பட்டன்ரோஜா ஒரு கிலோ ரூ. 200-க்கும், குண்டுமல்லி ரூ. 2 ஆயிரத்துக்கும், கனகாம்பரம் ரூ. 1,600-க்கும், சம்பங்கி ரூ. 100-க்கும் விற்பனையானது. பூக்களின் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தொடர்புடையது

தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்!

உலக தண்ணீா் தினம்: ஒசூா் பிஎம்சி கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

பரமத்தி வேலூரில் குண்டுமல்லி கிலோ ரூ. 800!

காதலர் தினம்! ரோஜா பூக்களின் விலை சதமடித்தன!!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


