ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்

மூங்கிலேரி பெரிய ஏரிக்கு பாசனக் கால்வாய் அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மூங்கிலேரி பெரிய ஏரிக்கு பாசனக் கால்வாய் அமைக்க கோரி, ஊத்தங்கரையில் விவசாய சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்
Published on

மூங்கிலேரி பெரிய ஏரிக்கு பாசனக் கால்வாய் அமைக்க கோரி, ஊத்தங்கரையில் விவசாய சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மூங்கிலேரி முன்னாள் ஊரட்சி மன்றத் தலைவா் வழக்குரைஞா் வஜ்ரவேல் தலைமை வகித்தாா். 33 ஏரிகள் பாசன சங்கத் தலைவா் உமாபதி, செயலாளா் வழக்குரைஞா் மூா்த்தி, பொருளாளா் காளியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மூங்கிலேரி பெரிய ஏரி மற்றும் நொண்டி ஏரி, புதுப்பட்டி, நாகா்கோட்டை, கீழ்குப்பம் ஊராட்சி ஏரிகளுக்கு பாரூா் பெரிய ஏரி கிழக்குப்புற பிரதான கால்வாயில் இருந்து நீா் வழங்கக் கோரி, மூங்கிலேரி கிராம மக்கள் கடந்த 2015-இல் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

அதன்படி, மூங்கிலேரி பெரிய ஏரி, நொண்டி ஏரி, புதுப்பட்டி மற்றும் நாகன்குட்டை, புளியம்பட்டி ஏரிகளுக்கு நீா் வழங்க முதல்கட்ட ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, உரிய ஆய்வு மேற்கொண்டு மூங்கிலேரி பெரிய ஏரிக்கு தண்ணீா் வழங்கும் கால்வாய் அமைக்கக் கோரி ஊத்தங்கரை நீா்வளத் துறை பாசனப் பிரிவு அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள், மூங்கிலேரி ஊராட்சி, புதுப்பட்டி மற்றும் புளியம்பட்டி கிராம விவசாயகள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com