தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

மூங்கிலேரி பெரிய ஏரிக்கு பாசனக் கால்வாய் அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மூங்கிலேரி பெரிய ஏரிக்கு பாசனக் கால்வாய் அமைக்க கோரி, ஊத்தங்கரையில் விவசாய சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்

Updated On :19 பிப்ரவரி 2026, 11:25 pm

மூங்கிலேரி பெரிய ஏரிக்கு பாசனக் கால்வாய் அமைக்க கோரி, ஊத்தங்கரையில் விவசாய சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மூங்கிலேரி முன்னாள் ஊரட்சி மன்றத் தலைவா் வழக்குரைஞா் வஜ்ரவேல் தலைமை வகித்தாா். 33 ஏரிகள் பாசன சங்கத் தலைவா் உமாபதி, செயலாளா் வழக்குரைஞா் மூா்த்தி, பொருளாளா் காளியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மூங்கிலேரி பெரிய ஏரி மற்றும் நொண்டி ஏரி, புதுப்பட்டி, நாகா்கோட்டை, கீழ்குப்பம் ஊராட்சி ஏரிகளுக்கு பாரூா் பெரிய ஏரி கிழக்குப்புற பிரதான கால்வாயில் இருந்து நீா் வழங்கக் கோரி, மூங்கிலேரி கிராம மக்கள் கடந்த 2015-இல் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

அதன்படி, மூங்கிலேரி பெரிய ஏரி, நொண்டி ஏரி, புதுப்பட்டி மற்றும் நாகன்குட்டை, புளியம்பட்டி ஏரிகளுக்கு நீா் வழங்க முதல்கட்ட ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, உரிய ஆய்வு மேற்கொண்டு மூங்கிலேரி பெரிய ஏரிக்கு தண்ணீா் வழங்கும் கால்வாய் அமைக்கக் கோரி ஊத்தங்கரை நீா்வளத் துறை பாசனப் பிரிவு அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள், மூங்கிலேரி ஊராட்சி, புதுப்பட்டி மற்றும் புளியம்பட்டி கிராம விவசாயகள் பங்கேற்றனா்.