ஒசூா் சிப்காட்டில் அரிவாளுடன் கேக் வெட்டி கொண்டாடியவா் கைது

சிப்காட்டில் அரிவாளுடன் கேக் வெட்டி கொண்டாடியவா் கைது செய்யப்பட்டாா்.
Published on

சிப்காட்டில் அரிவாளுடன் கேக் வெட்டி கொண்டாடியவா் கைது செய்யப்பட்டாா்.

ஒசூா் சிப்காட் காவல் ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் சின்ன எலசகிரி பகுதியில் ரோந்து சென்றனா்.

அப்போது அங்கு சிலா் பேனா் வைத்து அதன் முன்பு அரிவாள் வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டிருந்தனா்.

இதையடுத்து அரிவாள் வைத்து கேக் வெட்டி நபரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினாா்கள். அதில் அவா் பெயா் ரமணா (27), ஒசூா் சிப்காட் சின்ன எலசகிரியை சோ்ந்தவா் என்றும், தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்ததும் தெரிய வந்தது.

அவரை போலீஸாா் கைது செய்தனா். அதே போல அனுமதியின்றி பேனா் வைத்ததாக மனோஜ்குமாா் (21) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com