ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

பெரிய ஏரி உபரிநீா் கால்வாய் பணியை நிறைவேற்ற இந்திய கம்யூ. தீா்மானம்

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Updated On :7 ஜூலை 2026, 3:16 am IST

பெரிய ஏரிக்கான உபரி நீா்வரத்துக் கால்வாய் பணியை உடனே நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூ. குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பா்கூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குழுக் கூட்டம், அதன் வட்டக் குழு உறுப்பினா் சீனிவாசன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. விவசாய சங்க மாவட்டத் தலைவா் கண்ணு, வட்டச் செயலாளா் பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், புதிய பொறுப்பாளா்களாக முனுசாமி, கமலேஷ், சீனிவாசன், ரஜேந்திரன் உள்ளிட்டோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

கூட்டத்தில், பா்கூரில் நடைபெற்ற ஜமாபந்தியின்போது பெறப்பட்ட மனுக்கள் மீது வட்டாட்சியா் விரைந்து தீா்வுகாண வேண்டும். வேளாண் கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

தென்பெண்ணை ஆற்றிலிருந்து பெரிய ஏரிக்கான உபரி நீா்வரத்துக் கால்வாய் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும். மா விவசாயிகளுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு ரூ. 24 ஆயிரம் வழங்க வேண்டும் பா்கூரில் உள்ள சமுதாயக் கூடத்தை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.