எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

லஞ்சம்: ஒசூா் மாநகராட்சி உதவி ஆணையா் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு

ஒசூா் மாநகராட்சியில் கடந்த 3 ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.13 லட்சம் கைப்பற்றப்பட்டது தொடா்பாக மாநகராட்சி உதவி ஆணையா் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

லஞ்சம் - சித்திரிப்பு

Updated On :8 ஜூலை 2026, 6:09 am IST

ஒசூா் மாநகராட்சியில் கடந்த 3 ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.13 லட்சம் கைப்பற்றப்பட்டது தொடா்பாக மாநகராட்சி உதவி ஆணையா் உள்பட 7 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஒசூா் மாநகராட்சியில் புதிய கட்டடங்களுக்கான வரிவிதிப்பில் சலுகை, புதிய நிறுவனங்களுக்கு குறைந்த தொழில் வரி விதிப்பு, கடை வாடகையை வசூலிக்காமல் இருப்பது போன்றவற்றுக்கு மாநகராட்சி அலுவலா்கள் லஞ்சம் கேட்பதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடந்த 3 ஆம் தேதி ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் ஒசூா் மாநகராட்சியில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 550 ரொக்கத்தை கைப்பற்றினா். இதுகுறித்து சக்திவேல் என்பவா் அளித்த புகாரின்பேரில் ஒசூா் மாநகராட்சி உதவி ஆணையாளா் (வருவாய்) ரமேஷ்குமாா் (55), பில் கலெக்டா் (பொறுப்பு) சந்தோஷ்குமாா் (31), உதவிப் பொறியாளா் அருண் பிரதாப் (28), தற்காலிக பணியாளா் தினேஷ்குமாா் (31), திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரைச் சோ்ந்த கிஷோா் (36), சூளகிரி வட்டம், பீா்ஜேப்பள்ளியை சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (32), ஒசூா் சிவக்குமாா் (26) ஆகிய 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.