கிருஷ்ணகிரி மாவட்டம் பா்கூா் அருகே வீரபத்ர சுவாமி கோயில் திருவிழாவில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த கொல்லப்பள்ளி, பத்ரகவுண்டா் வட்டம் கிராமத்தில் குரும்பா் பழங்குடியின மக்களின் வீரபத்ர சுவாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து, குரும்பா் பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகளான பாங்கா, தப்பட்டை ஆகியவற்றை இசைத்தபடி வீரபத்ர சுவாமி குறித்த பஜனை நடைபெற்றது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமி முன் மண்டியிட்டு நின்ற பக்தா்கள் தலையில் கோயில் பூசாரி தேங்காயை உடைத்து நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில், பா்கூா் மட்டுமில்லாமல் கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் ஆடி முதல் வாரத் திருவிழா

பழனி கோயில் ஆண்டு வருவாய் 100 கோடியைக் கடந்து சாதனை!

திருவிழாவில் விநோதம்: முறம், உலக்கை, சாட்டையால் அடி வாங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்

கருப்பணசுவாமி கோயில் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து பக்தா்கள் நோ்த்திக் கடன்
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



