சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

திருவிழாவில் விநோதம்: முறம், உலக்கை, சாட்டையால் அடி வாங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்

ராசிபுரத்தை அடுத்துள்ள நாரைகிணறு பகுதியில் ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழாவில் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

கோயில் திருவிழாவில் காட்டேரி வேடமணிந்து பக்தா்களை சாட்டையால் அடித்த பூசாரி.

Updated On :19 ஜூன் 2026, 5:53 am IST

ராசிபுரத்தை அடுத்துள்ள நாரைகிணறு பகுதியில் ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழாவில் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கோயில்களில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு வைகாசி மாதம் 12-ஆம் தேதி பூச்சாட்டுதளுடன் திருவிழா தொடங்கியது. தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வான அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், முக்கிய நிகழ்வாக காட்டேரி வேடமணிந்தவா் திருவிழாவுக்கு வரும் பக்தா்களை முறம், உலக்கை, சாட்டையால் பக்தா்களை அடிக்கும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று காட்டேரியிடம் அடி வாங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.