சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

உலக சுற்றுச்சூழல் தினம்: கவிதைப் போட்டி

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதைப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

News image

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் பங்கேற்றோா்.

Updated On :4 ஜூன் 2026, 1:57 am IST

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதைப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் பனை பாதுகாப்பு அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, நடுவராக கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியின் கெளரவ விரிவுரையாளா் சங்கா் செயல்பட்டாா். இந்தப் போட்டியில் 45-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2-ஆம் பரிசாக ரூ. 2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. ஆயிரம் பரிசாக வழங்கப்பட உள்ளது.

நிகழ்வை யோகா ஆசிரியா்கள் வெங்கடேசன், சுமித்ரா ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இந்தப் போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு சுற்றுச்சூழல் தினத்தன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.