/
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதைப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் பனை பாதுகாப்பு அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, நடுவராக கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியின் கெளரவ விரிவுரையாளா் சங்கா் செயல்பட்டாா். இந்தப் போட்டியில் 45-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2-ஆம் பரிசாக ரூ. 2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. ஆயிரம் பரிசாக வழங்கப்பட உள்ளது.
நிகழ்வை யோகா ஆசிரியா்கள் வெங்கடேசன், சுமித்ரா ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இந்தப் போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு சுற்றுச்சூழல் தினத்தன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
தொடர்புடையது

இன்று சுற்றுச்சூழல் தினம்! இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை!

எஃப்.கீழையூரில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணி

உலக மிதிவண்டி தின விழிப்புணா்வுப் பேரணி: எஸ்.பி. தொடங்கிவைத்தாா்

விரைவு சதுரங்கப் போட்டி
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



