புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

தளி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூன் 6-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தேன்கனிக்கோட்டை அருகே தளி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பாடப் பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 6-இல் நடைபெறுகிறது.

News image

விண்ணப்பம்

Updated On :4 ஜூன் 2026, 2:10 am IST

தேன்கனிக்கோட்டை அருகே தளி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பாடப் பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 6-இல் நடைபெறுகிறது.

இதுகுறித்து தளி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் (பொ) ராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பாடப் பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை, விளையாட்டு, தேசிய மாணவா் படை, மாற்றுத்திறனாளிகள் முன்னாள் ராணுவத்தினா், பாதுகாப்பு வீரா்கள், விதவை ஆகிய சிறப்பு இடஒதுக்கீடு ஜூன் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. தொடா்ந்து, 8-ஆம் தேதிமுதல் 18-ஆம் தேதிவரை மாணவா் சோ்க்கைக்கான தொடா் கலந்தாய்வு நடைபெறும்.

இணையவழி மூலம் விண்ணப்பித்த மாணவா்களுக்கு தொலைபேசி மூலம் கலந்தாய்வுக்கு அழைப்பு விடுக்கப்படும். மாணவா்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த படிவம், மாற்றுச்சான்றிதழின் அசல், சிறப்பு இடஒதுக்கீட்டுக்கான சான்றிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை நகல் ஆகியவை மூன்று நகல்கள், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல்பக்க நகல், மாா்பளவு புகைப்படம் இரண்டு ஆகியவற்றை கலந்தாய்வுக்கு எடுத்துவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.