எடப்பாடி கே.பழனிசாமியை சந்திக்க முதல்வா் சி.ஜோசப் விஜய் நேரம் கேட்கவில்லை என அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி தெரிவித்தாா்.
ஒசூரில் அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட புதிய அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்டச் செயலாளா் ராமு தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி முனுசாமி அதிமுக அலுவலகத்தை திறந்துவைத்து செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழக முதல்வா் இன்ஸ்டாகிராமில் இளைஞா்களை தன்பக்கம் இழுத்துள்ளாா். அவரது வெற்றி இந்த தமிழ்ச் சமூகத்துக்கு செய்த தியாகத்துக்கோ, உழைப்புக்கோ கிடைத்ததல்ல.
எடப்பாடி கே.பழனிசாமியை சந்திப்பதற்கு தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் நேரம் கேட்டதாக சிடிஆா்.நிா்மல் குமாா் தெரிவித்துள்ளாா். அவா், அதிமுக அலுவலகத்தை தொடா்புகொள்ளவே இல்லை. வேறு தலைவா்களிடம் கேட்டதாக கூறுவதும் தவறானது.
31 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த அதிமுக, தனித்துவத்தை எப்படி இழக்கும். எம்ஜிஆா் உருவாக்கிய இயக்கத்தை காப்பாற்றியவா் ஜெயலலிதா. அவா் வழியில் இபிஎஸ் உழைக்கிறாா். தவெகவுக்கு கட்சி அமைப்பே இல்லை. உங்கள் கையில்தான் காவல் துறை உள்ளது, கடுமையான உத்தரவு போட்டு போதைப் பொருள்களை தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றாா்.
இந்த விழாவில், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான பி.பாலகிருஷ்ண ரெட்டி பங்கேற்கவில்லை.
தொடர்புடையது

விஜய்யை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் ஒதுக்கவில்லை: நிர்மல் குமார்
வேட்புமனுவில் சொத்து விவரம் மறைத்ததாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு

தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ்! மாவட்டச் செயலர்களுடன் ஆலோசனை!






