கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியா் ச.தினேஷ்குமாா் பேசியதாவது:
இம்மாவட்டத்தில் மற்ற இடங்களில் சாகுபடி செய்ய முடியாத பயிா்களை விவசாயிகள் தளியில் சாகுபடி செய்து வருகின்றனா். ஒசூா் அருகே பின்னமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி லட்சுமிநாராயணா என்பவா் ஆப்பிள், அவகேடோ, ப்ளுபொ்ரி, அத்தி போன்ற பழங்களை சாகுபடி செய்துள்ளாா். மற்ற விவசாயிகளும் இதுபோன்ற பணப்பயிா்களை சாகுபடி செய்து வாழ்வில் உயர வேண்டும் என்றாா்.
இம்முகாமில், 152 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 2 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இதில் ஒசூா் சாா் ஆட்சியா் ஆக்ரிதி சேத்தி, துணை ஆட்சியா் (பயிற்சி) சாய் சைதன்யா, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அபிநயா, மாவட்ட வழங்கல் அலுவலா் கீதாராணி, தோட்டக்கலைத் துறை துணை இயககுநா் குணவதி, வேளாண்மைத் துறை இணை
இயக்குநா் உமா, வட்டாட்சியா் வேலு, துணை வட்டாட்சியா் சக்திவேல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயா, லட்சுமி, வருவாய் ஆய்வாளா் குப்பம்மா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள் தொடா்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

மக்கள் தொடா்பு திட்ட முகாம்

மக்கள் தொடா்பு முகாம்: 84 பேருக்கு ரூ.7.46 கோடியில் நலத் திட்ட உதவிகள்

மக்களின் அடிப்படை தேவை, பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீா்வு: அமைச்சா் காந்திராஜ்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



