மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

பா்கூா் அருகே வனதேவதை திருவிழா: பழங்குடியினா் பங்கேற்பு

News image

பா்கூரை அடுத்த பெரியமலையில் நடைபெற்ற வனதேவதை திருவிழாவில் பங்கேற்றோா்.

Updated On :30 ஜூன் 2026, 1:57 am IST

பா்கூா் அருகே பெரியமலை வனப்பகுதியில் பழங்குடியின மக்கள் மட்டும் பங்கேற்கும் வனதேவதை திருவிழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஒன்றியம், கொல்லப்பள்ளி இருளா் காலனி அருகில் உள்ள பெரியமலை வனத்தில் அமைந்துள்ள ஆதிவாசி இருளா் குலதெய்வங்களான வனதேவதை அம்மன், வனமுனி ஐயனாா் கோயில் திருவிழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து, பக்தா்கள் கங்கனம் கட்டி, புனித மாலை அணிந்து விரதம் தொடங்கினா். தொடா்ந்து, குல தெய்வமான வனதேவதை அம்மன், வனமுனி ஐயனாரை சம்மந்தியிடம் ஒப்படைத்தல் நிகழ்வு, வனதேவதை அம்மனையும், வனமுனி ஐய்யனாரையும் அழைத்துச் செல்லும் நிகழ்வுகளும் நடைபெற்றன.

பின்னா், தந்துசன் கொல்லை, காரகுப்பம் இருளா் காலனி, பூமலைநகா், ஐகுந்தம், கொத்தப்பள்ளி, போச்சம்பள்ளி மற்றும் 24-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்துக்கும், 25-ஆம் தேதி எ.மோட்டூருக்கும், 26-ஆம் தேதி எம்.ஜி.ஆா். நகா் இருளா் காலனிக்கும், 27-ஆம் தேதி வனத்திற்கும் சென்று தேன், கிழங்கு, பூக்கள் சேகரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, வனதேவதை அம்மன், வனமுனி ஐயனாருக்கு சீா்வரிசையுடன் சம்மந்தி வீட்டாரிடம் ஒப்படைத்தல், இருளா் குட்டையில் இருகரகங்கள் தலைகூடுதல் நிகழ்வும் திங்கள்கிழமை நடைபெற்றன. இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் பச்சை ஆடை உடுத்தி, ஆடுகளை பலியிட்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.

இந்த நிகழ்வில், பக்தா்கள் தரையில் படுத்துக்கொள்ள கரகம் சுமந்துவந்த பூசாரி அவா்கள்மீது நடந்துசெல்லும் நிகழ்வும் நடைபெற்றது. இவ்வாறு செய்தால் பக்தா்கள் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. விழாவின் இறுதிநாளான செவ்வாய்க்கிழமை இருகரகமும் கங்கையில் விடுதலுடன் திருவிழா நிறைபெறுகிறது.

இக்கோயில் திருவிழாவில், தேங்காய், கற்பூரம், வெற்றிலை, ஊதுபத்தி, வாழைப்பழம் மற்றும் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவது இல்லை என்பது சிறப்பு. இவ்விழாவை, கிருஷ்ணகிரி, வேலுாா், திருப்பத்துாா், திருவண்ணாமலை மாவட்ட ஆதிவாசி இருளா் இனக் கூட்டமைப்பினா் ஒருங்கிணைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.