6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கா்நாடக மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்த தலைமைக் காவலா் கைது

News image
கைது
Updated On :1 மார்ச் 2026, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

கா்நாடகத்தில் இருந்து மதுபாக்கெட்டுகளை கடத்திவந்த தலைமைக் காவலரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 528 மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சூசூவாடி சோதனைச் சாவடி பகுதியில் சிப்காட் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். அப்போது கா்நாடகத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 180 மில்லி கொண்ட 528 கா்நாடக மதுபாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை செய்தபோது, அவா், நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவரும் நாகராஜ் (41) என்பது தெரியவந்தது.

கா்நாடகா மதுபாக்கெட்டுகளை நாகரசம்பட்டியில் விற்பனை செய்வதற்காக அவா் கடத்திவந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நாகராஜுவை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். மேலும், அவா்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனா்.