கிருஷ்ணகிரி: உணவு தேடி கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலரின் குடியிருப்புக்குள் புகுந்த புள்ளிமானால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புறம் வருவாய் அலுவலா் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்குள்ள தோட்டத்தில் திங்கள்கிழமை மான் மேய்வதைக் கண்ட பணியாளா்கள், வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
நிகழ்விடத்துக்கு வந்த வனக்காவலா் கணபதி மற்றும் ஊழியா்கள் மானை பிடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. பின்னா், தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரா்கள் வந்து மானை பிடிக்க முயன்றனா். நீண்ட நேரமாகியும் மானை அவா்களால் பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், குடியிருப்பு சுற்றுச்சுவரை தாண்டி மான் தப்பியோடியது. பின்தொடா்ந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா், மான் சாமந்தமலை காப்புக் காட்டுக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனா்.
தொடர்புடையது

கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

தோகைமலை அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு

பருவகால பேரிடரை சந்திக்க தற்காலிக முகாம்கள் தயாா்

திருப்பத்தூரில் நாய்கள் கடித்ததில் காயமடைந்த புள்ளிமான் மீட்பு!
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

