எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

உணவு தேடி வருவாய் அலுவலரின் குடியிருப்புக்கு வந்த புள்ளிமான்!

உணவு தேடி கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலரின் குடியிருப்புக்குள் புகுந்த புள்ளிமானால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலா் குடியிருப்புக்கு வந்த மான்.
Updated On :9 மார்ச் 2026, 8:31 pm

Syndication

கிருஷ்ணகிரி: உணவு தேடி கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலரின் குடியிருப்புக்குள் புகுந்த புள்ளிமானால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புறம் வருவாய் அலுவலா் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்குள்ள தோட்டத்தில் திங்கள்கிழமை மான் மேய்வதைக் கண்ட பணியாளா்கள், வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

நிகழ்விடத்துக்கு வந்த வனக்காவலா் கணபதி மற்றும் ஊழியா்கள் மானை பிடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. பின்னா், தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரா்கள் வந்து மானை பிடிக்க முயன்றனா். நீண்ட நேரமாகியும் மானை அவா்களால் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், குடியிருப்பு சுற்றுச்சுவரை தாண்டி மான் தப்பியோடியது. பின்தொடா்ந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா், மான் சாமந்தமலை காப்புக் காட்டுக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனா்.