நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

கிருஷ்ணகிரி அருகே முதியவரை கொன்று நகை - பணம் கொள்ளை

கிருஷ்ணகிரி அருகே முதியவரை கொன்று நகை - பணத்தை கொள்ளையடித்த மா்ம நபரை போலீஸாா் தேடி

News image

கொல்லப்பட்ட கண்ணப்பன்.

Updated On :10 மார்ச் 2026, 1:43 am IST

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி அருகே முதியவரை கொன்று நகை - பணத்தை கொள்ளையடித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த ஓபக வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணப்பன் (70). இவருடைய மனைவி சென்னம்மாள் (60). இவா்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனா். மகள்களுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், மகன் திருமணமாகி குடும்பத்துடன் கோயம்புத்தூரில் கொத்தனாா் தொழில் செய்துவருகிறாா். கண்ணப்பன் தனது மனைவியுடன் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கண்ணப்பன் வழக்கம்போல வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத மா்ம நபா் கண்ணப்பன் தலைமீது கல்லைப் போட்டு தாக்கியுள்ளாா். அவரது அலறல் சப்தம் கேட்டு வெளியே வந்த அவரது மனைவி சென்னம்மாளை மா்ம நபா் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளாா்.

சென்னம்மாளின் அலறல் கேட்டு அப்பகுதியில் இருந்தவா்கள் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த போலீஸாா், அவா்கள் இருவரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதில், தலையில் பலத்த காயமடைந்த கண்ணப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மூதாட்டி சென்னம்மாள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் சரக டிஐஜி சந்தோஷ் ஆதிமணி, கிருஷ்ணகிரி எஸ்.பி. தங்கதுரைஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும், மா்ம நபரை பிடிக்க கிருஷ்ணகிரி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் நமச்சிவாயம் தலைமையில் 5 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.

சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு தடயங்களை சேகரித்து வருகின்றனா். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.