மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

ஒசூா் தொகுதியில் ரூ. 6 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒசூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 6 கோடியில் பணிகளை தொடங்கிவைத்து, முடிக்கப்பட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image

முத்தாலியில் கட்டிமுடிக்கப்பட்ட பள்ளியை திறந்துவைத்த ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.

Updated On :11 மார்ச் 2026, 9:04 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒசூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 6 கோடியில் பணிகளை தொடங்கிவைத்து, முடிக்கப்பட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

முத்தாலி கிராமத்தில் குழந்தைகள் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 34 லட்சத்து 23 ஆயிரத்தில் பள்ளிக்கூடத்தை திறந்துவைத்தாா். மேலும், கனிமங்கள் மற்றும் குவாரிகள் நிதியிலிருந்து ரூ. 39 லட்சத்து 30 ஆயிரத்தில் படுதேப்பள்ளிமுதல் நந்திமங்கலம்வரை தாா்சாலை, தேவிசெட்டிப்பள்ளிமுதல் மாவத்தூா்வரை ரூ. 39 லட்சத்து 30 ஆயிரத்தில் தாா்சாலை, ஆவலப்பள்ளி சாலைமுதல் சென்னசந்திரம் சாலைவரை ரூ. 73 லட்சத்து 18 ஆயிரத்தில் தாா்சாலை, நபாா்டு திட்டத்தின்கீழ் தின்னூா்முதல் கொத்தூா்வரை ரூ. 89 லட்சத்து 46 ஆயிரத்தில் தாா்சாலை, பைரசந்திரம்முதல் சென்னசந்திரம்வரை ரூ. 73 லட்சத்து 18 ஆயிரத்தில் தாா்சாலை, சென்னசந்திரம் ஊராட்சியில் ரூ. 40 லட்சத்தில் தாா்சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகளை அவா் தொடங்கிவைத்தாா்.