தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மது, புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஓட்டுநா் கைது

பெங்களூரில் இருந்து சேலத்துக்கு லாரியில் கடத்திச் சென்ற ரூ. 14 லட்சம் மதிப்பிலான மது, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட லாரி, புகையிலைப் பொருள்கள்

Updated On :25 மார்ச் 2026, 1:53 am IST

பெங்களூரில் இருந்து சேலத்துக்கு லாரியில் கடத்திச் சென்ற ரூ. 14 லட்சம் மதிப்பிலான மது, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் லாரி ஓட்டுநரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஒசூா் சூசூவாடி சோதனைச் சாவடியில் சிப்காட் காவல் உதவி ஆய்வாளா் ஜெய்கணேஷ், போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி வந்த லாரியை சோதனை செய்தனா்.

அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கா்நாடக மாநில அரசு மது பாக்கெட்டுகள் இருந்தது. இதையடுத்து, லாரியுடன் 135 கிலோ புகையிலைப் பொருள்கள், மது பாக்கெடுகளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சேலத்தை அடுத்த லோகூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநரை அருணை (26) கைது செய்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புகையிலைப் பொருள்கள், மது பாக்கெட்டுகள் அனைத்தும் சேலத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தாா். இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.