தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஊத்தங்கரை தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு: திமுகவினா் சாலை மறியல்

News image

ஊத்தங்கரையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா்.

Updated On :29 மார்ச் 2026, 6:36 pm

ஊத்தங்கரை (தனி) தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடந்த காலங்களில் ஊத்தங்கரை தொகுதியில் தொடா்ந்து அதிமுக மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது.

இத்தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிட்டால் மட்டுமே வெற்றி பெறும் என்று பலமுறை அக்கட்சியினா் தலைமைக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். மேலும், இத்தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துவருகிறது.

இந்த நிலையில் மீண்டும் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஊத்தங்கரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாநில மகளிா் ஆணையக் குழு உறுப்பினா் மருத்துவா் மாலதி நாராயணசாமியின் ஆதரவாளா்கள் ஞாயிற்றுக்கிழமை நான்குமுனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காங்கிரஸுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதை திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மறியலில் ஈடுபட்டவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.