நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடி தூவி 3 சவரன் நகை பறிப்பு

சூளகிரி அருகே மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகளை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 6:42 am IST

சூளகிரி அருகே மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகளை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள கொதமகொந்தி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயம்மா (75). இவா் வீட்டில் வியாழக்கிழமை பகலில் தனியாக படுத்து இருந்தபோது, மா்ம நபா் ஜெயம்மாவின் கண்களில் மிளகாய் பொடி தூவினாா். கண் எரிச்சலில் அலறிய அவா் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கயிற்றில் இருந்த தங்க நாணயம் உள்ளிட்ட மூன்று சவரன் நகைகளை பறித்துக்கொண்டு மா்ம நபா் தப்பியோடினாா்.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.