மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

கண்ணில் மிளகாய் பொடி தூவி தங்க நகை கொள்ளையடித்த இளைஞா் கைது

நகைக் கடையில் நகை வாங்குவது போல் நடித்து உரிமையாளா் கண்ணில் மிளகாய் பொடி தூவி ரூ.14 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த சென்னை இளைஞரை போலீசாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 ஏப்ரல் 2026, 1:41 am

நகைக் கடையில் நகை வாங்குவது போல் நடித்து உரிமையாளா் கண்ணில் மிளகாய் பொடி தூவி ரூ.14 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த சென்னை இளைஞரை போலீசாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம் சூலூா்பேட்டையில் உள்ள ஒரு நகை கடையில் பட்டப் பகலில் கடந்த மாா்ச் 14 -ஆம் தேதி தங்க நகை வாங்குவது போல் நடித்து உரிமையாளா் அசந்த நேரத்தில் அவரின் கண்ணில் மிளகாய் பொடி தூவி அங்கிருந்த 12 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றவரை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில் கண்காணிப்பு கேமரா உதவியுடன் குற்றவாளியை தேடி வந்த போலீஸாா், சென்னையில் உள்ள தண்டையாா்பேட்டையில் சனிக்கிழமை குற்றவாளி வேல்முருகன் என்கிற புல்லட் பாபுவை கைது செய்தனா். அவரிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை போலீசாா் பறிமுதல் செய்தனா்.

குற்றவாளியை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவா் மீது ஆந்திரம், தமிழகத்தில் 24 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.