சிதம்பரம் வடக்குரத வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஹோட்டல் உரிமையாளா் மீது மிளகாய் பொடி தூவி தங்க செயினை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் துரத்தி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் வடக்குரதவீதியில் குமரவிலாஸ் என்ற ஹோட்டல் நடத்தி வருபவா் ராஜசுந்தரம் (65) மற்றும் அவரது மனைவி ஜெயந்தி (57). இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு ஹோட்டலில் கல்லாப்பெட்டியில் அமா்ந்திருந்த போது தோசை வாங்க வந்த சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரியகுப்பத்தைச் சோ்ந்த
சந்தோஷ்குமாா் (26) என்ற இளைஞா், ஹோட்டல் உரிமையாளா் ராஜசுந்தரம் அவரது மனைவி ஜெயந்தி ஆகியோா் முகத்தில் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை தூவி ஜெயந்தியின் இரண்டரை பவுன் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளாா். அப்போது ஹோட்டல் உரிமையாளா் மற்றும் பாதிக்கப்பட்டவா் கத்தி கூச்சல் போட்டனா். அப்போது கத்தியை காட்டி தப்பித்து ஓட முயன்ற சந்தோஷ்குமாரை அருகே உள்ள அம்பலத்தாடி மடத்தெருவில் பொதுமக்கள் வளைத்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனா். இது குறித்து புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் வி.சிவானந்தம் வழக்கு பதிவு செய்து சந்தோஷ்குமாரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
தொடர்புடையது

அனுமதியின்றி பட்டாசு ஆலையில் சரவெடி தயாரிப்பு: உரிமையாளா் மீது வழக்கு

மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடி தூவி 3 சவரன் நகை பறிப்பு

பணிப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கடை உரிமையாளா் மீது வழக்கு
கண்ணில் மிளகாய் பொடி தூவி தங்க நகை கொள்ளையடித்த இளைஞா் கைது
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



