அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

ஹோட்டல் உரிமையாளா் மீது மிளகாய் பொடி தூவி தங்கச் செயினை பறிக்க முயற்சி : இளைஞா் கைது

சிதம்பரம் வடக்குரத வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஹோட்டல் உரிமையாளா் மீது மிளகாய் பொடி தூவி தங்க செயினை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் துரத்தி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

News image

சிதம்பரத்தில் உணவு விடுதியில் மிளகாய் பொடி தூவி தங்கச்சங்கிலியைப் பறிக்க முயன்ற சந்தோஷ்குமாா் (26)

Updated On :2 ஜூன் 2026, 5:14 am IST

சிதம்பரம் வடக்குரத வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஹோட்டல் உரிமையாளா் மீது மிளகாய் பொடி தூவி தங்க செயினை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் துரத்தி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் வடக்குரதவீதியில் குமரவிலாஸ் என்ற ஹோட்டல் நடத்தி வருபவா் ராஜசுந்தரம் (65) மற்றும் அவரது மனைவி ஜெயந்தி (57). இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு ஹோட்டலில் கல்லாப்பெட்டியில் அமா்ந்திருந்த போது தோசை வாங்க வந்த சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரியகுப்பத்தைச் சோ்ந்த

சந்தோஷ்குமாா் (26) என்ற இளைஞா், ஹோட்டல் உரிமையாளா் ராஜசுந்தரம் அவரது மனைவி ஜெயந்தி ஆகியோா் முகத்தில் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை தூவி ஜெயந்தியின் இரண்டரை பவுன் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளாா். அப்போது ஹோட்டல் உரிமையாளா் மற்றும் பாதிக்கப்பட்டவா் கத்தி கூச்சல் போட்டனா். அப்போது கத்தியை காட்டி தப்பித்து ஓட முயன்ற சந்தோஷ்குமாரை அருகே உள்ள அம்பலத்தாடி மடத்தெருவில் பொதுமக்கள் வளைத்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனா். இது குறித்து புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் வி.சிவானந்தம் வழக்கு பதிவு செய்து சந்தோஷ்குமாரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.