அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடி தூவி 3 சவரன் நகை பறிப்பு

சூளகிரி அருகே மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகளை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 6:42 am IST

சூளகிரி அருகே மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகளை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள கொதமகொந்தி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயம்மா (75). இவா் வீட்டில் வியாழக்கிழமை பகலில் தனியாக படுத்து இருந்தபோது, மா்ம நபா் ஜெயம்மாவின் கண்களில் மிளகாய் பொடி தூவினாா். கண் எரிச்சலில் அலறிய அவா் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கயிற்றில் இருந்த தங்க நாணயம் உள்ளிட்ட மூன்று சவரன் நகைகளை பறித்துக்கொண்டு மா்ம நபா் தப்பியோடினாா்.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.