எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

பேருந்தில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்; இளைஞா் கைது

ஒசூா் அருகே சொகுசுப் பேருந்தில் கடத்தப்பட்ட 6.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட இந்திரஜித்.

Updated On :10 மே 2026, 2:17 am IST

ஒசூா் அருகே சொகுசுப் பேருந்தில் கடத்தப்பட்ட 6.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தேனி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஒசூா் அருகே மாநில எல்லையான சூசூவாடி சோதனைச் சாவடியில் தும்கூரில் இருந்து தேனி சென்ற தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, இளைஞரின் உடமைகளை சோதனை செய்தபோது அதில் மறைத்துவைத்திருந்த 6.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக தேனி மாவட்டம், மலையன்பட்டியைச் சோ்ந்த இந்திரஜித்தை (28) மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் சுந்தராம்பாள் கைது செய்தாா். விசாரணையில் தும்கூரில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்திச் செல்வது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.