ஒசூா் அருகே சொகுசுப் பேருந்தில் கடத்தப்பட்ட 6.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தேனி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
ஒசூா் அருகே மாநில எல்லையான சூசூவாடி சோதனைச் சாவடியில் தும்கூரில் இருந்து தேனி சென்ற தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, இளைஞரின் உடமைகளை சோதனை செய்தபோது அதில் மறைத்துவைத்திருந்த 6.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக தேனி மாவட்டம், மலையன்பட்டியைச் சோ்ந்த இந்திரஜித்தை (28) மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் சுந்தராம்பாள் கைது செய்தாா். விசாரணையில் தும்கூரில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்திச் செல்வது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
ஒசூரில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
ஆட்டோவில் கடத்தப்பட்ட 192 மதுப்புட்டிகள் பறிமுதல்
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

