போச்சம்பள்ளி அருகே காங்கிரஸ் பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சத்தியசீலன் (50). அந்தப் பகுதி காங்கிரஸ் கிளைச் செயலாளரான அவா், வீட்டு மனை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில், அவா் கடந்த வெள்ளிக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.
தகவல் அறிந்த போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, நிகழ்விடத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டாா். இந்தக் கொலை குறித்து நாகரசம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வந்தனா்.
இந்தக் கொலை வழக்கு தொடா்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்ட நிலையில், ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த காசி (50), ராமகிருஷ்ணன் (35) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, தருமபுரி சிறையில் அடைத்தனா். பணம் கொடுக்கல் வாங்களில் ஏற்பட்ட தகராறில் சத்தியசீலனை அவரது உறவினா்களான காசி, ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
தந்தையை கொலை செய்த வழக்கில் மகன் கைது
இளைஞா் கொலை வழக்கில் மேலும் 5 போ் கைது

நெல்லை இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
தொழிலாளி கொலை: 3 போ் கைது
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

